Sunday, March 30, 2014


Reproductive Endocrinology

Reproductive endocrinology is a branch of medicine that identifies and treats infertility in both men and women. In the United States, 15 percent of all couples will face fertility issues, and many will be diagnosed with a reproductive disorder. Many infertile couples choose to see a reproductive endocrinologist when deciding upon fertility treatments. Your reproductive endocrinologist will identify factors involved in your infertility and select the appropriate methods to treat these factors.
Our team of passionate and committed reproductive endocrinologists showcases some of the most renowned fertility experts in the country. Consistently on the cutting edge of fertility treatments and technology, our physicians are committed to providing superior care to all patients facing reproductive issues.

Reproductive Endocrinology and Infertility

The infertility program at Mount Sinai is based on an affiliation with the Reproductive Medicine Associates of New York, which offers the most advanced services in assisted reproductive technology (ART) to help infertile patients who may require such approaches to achieve a healthy baby.

Treatments and Procedures

We customize treatment protocols to provide each patient with state-of-the-art techniques to optimize their care. Treatments include:
  • In vitro Fertilization - Embryo Transfer (IVF-ET): Nearly five million babies have been born after use of IVF-ET, a procedure that involves retrieval of an egg directly from a ripe follicle in the woman's ovary then fertilized by sperm in a dish. The fertilized egg is then allowed to develop into an embryo in the laboratory prior to being transferred through the cervix into the uterus.

  • Blastocyst culture and transfer: A technique developed for in vitro fertilization (IVF) that improves likelihood of successful implantation of embryos while minimizing the risk of multiple pregnancy. Culture of the embryos for five days allows for growth to the blastocyst stage of development and provides a greater opportunity to assess viability and achieve a positive outcome.

  • Preimplantation Genetic Diagnosis (PGD): An advanced genetic technique which allows an individual embryo to be analyzed. PGD is a recommended procedure for patients who are carriers of a genetic anomaly or are affected by a genetic condition. Biopsy and selection of healthy embryos dramatically reduces the possibility of passing the condition to future offspring. Additionally, PGD can be used to select embryos that do not possess chromosomal abnormalities.

  • Comprehensive Chromosome Screening (CCS): A revolutionary technology involving thorough analysis, selection, and transfer of embryos that possess a normal genetic makeup. Assessment and selection of embryos that have a normal chromosomal make-up allows for higher implantation rates and fewer pregnancy losses.

  • Embryo cryopreservation: A procedure where embryos are frozen and placed safely in liquid nitrogen for future thawing and use in fertility treatments.

  • Egg freezing (oocyte cryopreservation): A fertility preservation treatment option for women interested in preserving current unfertilized eggs in order to attempt pregnancy in the future. Women who anticipate having children after the age of 35, are about to go under medical therapies such as chemotherapy or radiation treatment for cancer, or have a family history of endometriosis, premature ovarian failure, or early menopause may consider the treatment as a means to circumvent future reproductive complications.

  • Egg donation: Eggs are removed from the ovaries of a fertile donor for use in an infertile patient.

  • Intracytoplasmic sperm injection (ICSI): In cases where the male partner has abnormal or few sperm, mature sperm may be injected directly into the egg in the laboratory to achieve a normal pregnancy. A microscope and microsurgical equipment are used to insert the sperm into an egg.
In order to determine the proper course of treatment for each couple, we may perform a number of diagnostic tests:
  • Preconceptual Counseling: Basic steps for a couple trying to conceive

  • Transvaginal Ultrasound: An internal ultrasound is used to evaluate a woman's uterus and ovaries

  • Semen Analysis: Test of the male partner's sperm count, shape, and motility to assess his fertility

  • Hormonal Testing: Tests of important hormones that give important information about a woman's reproductive system

  • Endometrial Biopsy: Evaluation of the uterine exposure and response to progesterone by taking a small sample of tissue

  • Post-coital Test: A test to evaluate the male-female interaction

  • Hysterosalpingogram: An X-ray of the uterus following injection of dye through the cervix used to evaluate the fallopian tubes and uterus

  • Basal Body Temperature Charting: By taking her temperature each morning, a woman can identify whether ovulation occurs and on what day it occurs.
The clinical and scientific teams at Mount Sinai and Reproductive Medicine Associates of New York were among the first to help women conceive using previously frozen oocytes (eggs) from egg donors. Effectively, this could halt the biological clock as these eggs could be successfully preserved before egg quantity and quality undergo their natural age-related decline in function.
 posted by

R.Rasa Prabakaran M.Sc,M.Phil,B.Ed,
Lecturer in Zoology.

அறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப் பெயர்கள்

அறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப் பெயர்கள்

- இலக்குவனார் திருவள்ளுவன் 



துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர வேண்டும். தமிழில் வரும் பிற துறைகள் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் பார்க்கும் பொழுது தமிழ் அறிவியல் துறையில் முன்னேறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நாம் எட்ட வேண்டிய இலக்கு மிக மிகத் தொலைவில் உள்ளது.தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது அறிவியலிலும்தமிழ் ! அனைத்திலும்தமிழ்! என்பதே அரசின் முழக்கமாக அமைந்தது. ஆனால், இதனைச் செயல்படுத்தும் வகையில் போதிய துறையறிவும் தமிழ்ப்புலமையும் நிறைந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். பிற துறை யறிவினர் தமிழில் புலமை பெறுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். தமிழ்ப்புலமையாளர்கள், அறிவியல்துறைகளில் தேர்ச்சி பெறுவதைக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும். ஒரே துறையின் உட்பிரிவாகவும் பல துறைகள் வளர்ந்துள்ளன. ஆனால் அவற்றின் பெயர்களைக்கூட அகராதிகளில் காண இயலவில்லை. இங்கே பெரும்பாலான துறைகளின் பெயர்கள் தமிழில் தரப்படுகின்றன. ஒவ்வொரு

துறைகளைப் பற்றியும் குறைந்தது ஒரு பத்தி, அடுத்து ஒரு கட்டுரை, அதற்கடுத்து ஒரு நூல், பின்னர் பல்வேறு நூல்கள் என அறிவியல் துறைகளில் தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.

  1. அகச்சுரப்பியியல் - Endocrinology
  2. அடிசிலியல் - Aristology
  3. அடையாளவியல் - Symbology
  4. அண்டவியல் - Universology
  5. அண்டவியல் - Cosmology
  6. அணலியல் - Pogonology
  7. அருங்காட்சியியல் - Museology
  8. அருளரியல் - Hagiology
  9. அளவீட்டியல் - Metrology
  10. அற்புதவியல் - Aretalogy
  11. ஆடவர் நோயியல் - Andrology
  12. ஆய்வு வினையியல் - Sakanology
  13. ஆவணவியல் - Anagraphy 
  14. ஆவியியல் - Spectrology
  15. ஆறுகளியல் - Potamology
  16. இசையியல் - Musicology
  17. இந்தியவியல் - Indology
  18. இயற்பியல் - Physics
  19. இரைப்பையியல் - Gastrology
  20. இலக்கிலி இயல் - Dysteleology
  21. இறை எதிர் இயல் - Atheology
  22. இறைமையியல் - Pistology
  23. இறைமையியல் - Theology
  24. இன உறுப்பியல் - Aedoeology 
  25. இன்ப துன்பவியல் - Algedonics
  26. இனப் பண்பாட்டியல் - Ethnology
  27. இனவியல் - Raciology
  28. ஈரிடவாழ்வி இயல் - Herpetology
  29. உடலியல் - Physiology
  30. உடற் பண்டுவஇயல் - Phytogeography
  31. உடற்பண்பியல் - Somatology
  32. உடுவியக்கவியல் - Asteroseismology 
  33. உணர்வகற்றியல் – Anesthesiology
  34. உயிர் மின்னியல் - electro biology
  35. உயிர்ப்படிமவியல் - Paleontology
  36. உயிர்ப்பொருளியல் - Physiology
  37. உயிர்மியியல் - Cytology
  38. உயிரித் தொகை மரபியல் - Population Genetics
  39. உயிரித்தொகை இயக்க இயல் - Population Dynamics
  40. உயிரிய இயற்பியல் - Biophysics
  41. உயிரிய மின்னணுவியல் - Bioelectronics
  42. உயிரிய வேதியியல் - Biochemistry
  43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் - Biochemical taxonomy
  44. உயிரியத்தொழில் நுட்ப இயல் - Biotechnology
  45. உயிரியப் பொறியியல் - Bioengineering 
  46. உயிரியல் - Biology
  47. உயிரினக் காலவியல் - Bioclimatology
  48. உயிரினச் சூழ்வியல் - Bioecology
  49. உருவகவியல் - Tropology
  50. உருள்புழுவியல் - Nematology
  51. உரைவிளக்கியல் - Dittology
  52. உளவியல் - Psychology
  53. ஊட்டவியல் - Trophology
  54. எகிப்தியல் - Egyptology
  55. எண்கணியியல் - Numerology
  56. எரிமலையியல் - Volconology
  57. எலும்பியல் - Osteology
  58. எலும்பு நோய் இயல் - Osteo pathology
  59. எறும்பியல் - Myrmecology
  60. ஒட்பவியல் - Pantology
  61. ஒப்பனையியல் - Cosmetology 
  62. ஒலியியல் - Phonology
  63. ஒவ்வாமை இயல் - Allergology
  64. ஒழுக்கவியல் - Ethics
  65. ஒளி அளவை இயல் - Photometry
  66. ஒளி இயல் - Photology
  67. ஒளி உயிரியல் - Photobiology
  68. ஒளி விளைவியல் - Actinology
  69. ஒளி வேதியியல் - Photo Chemistry
  70. ஒளித்துத்த வரைவியல் - Photozincography
  71. ஓசையியல் - Acoustics 
  72. கசிவியல் - Eccrinology
  73. கட்டடச்சூழலியல் - Arcology 
  74. கடப்பாட்டியல் - Deontology
  75. கடல் உயிரியல் - Marine biology 
  76. கடற் பாசியியல் - Algology
  77. கண்ணியல் - Opthalmology
  78. கணிப்பியல் - Astrology
  79. கதிர் மண்டிலவியல் - Astrogeology
  80. கதிர் விளைவியல் - Actinobiology 
  81. கரிசியல் - Hamartiology
  82. கரிம வேதியியல் - Organic Chemistry
  83. கருத்தியல் - Ideology
  84. கருதுகை விலங்கியல் - Cryptozoology
  85. கருவியல் - Embryology
  86. கருவியல் - Embryology
  87. கல்வி உளவியல் - Educational Psychology
  88. கலைச்சொல்லியல் - Terminology
  89. கழிவியல் - Garbology
  90. கனி வளர்ப்பியல் - Pomology
  91. கனிம வேதியியல் - inorganic chemistry
  92. கனியியல் - Carpology
  93. கனியியல் - Pomology
  94. காளானியல் - Mycology
  95. காற்றழுத்தவியல் - Aerostatics 
  96. காற்றியக்கவியல் - Aerodynamics 
  97. காற்றியல் - Anemology
  98. கிறித்துவியல் - Christology
  99. குடல் புழுவியல் - Helminthology
  100. குருட்டியல் -Typhology
  101. குருதி இயல் - Haematology / Hematology
  102. குளுமையியல் - Cryology 
  103. குற்றவியல் - Criminology
  104. குறிசொல்லியல் - Parapsychology
  105. குறிப்பியல் - Cryptology
  106. குறியீட்டியல் - Iconology
  107. கெல்டிக் சடங்கியல் - Druidology
  108. கேட்பியல் - Audiology
  109. கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)-Pasimology
  110. கையெழுத்தியல் - Graphology
  111. கொள்ளை நோயியல்- Epidomology
  112. கோட்பாட்டியல் - Archology
  113. கோளியல் - Uranology
  114. சங்குஇயல் - Conchology
  115. சமயவிழாவியல் - Heortology
  116. சரி தவறு ஆய்வியல் - Alethiology
  117. சாணவியல் - Scatology
  118. சிலந்தி இயல் - Araneology
  119. சிலந்தியியல் - Arachnology 
  120. சிறப்புச் சொல் தோற்றவியல் - Onomatology 
  121. சீனவியல் - Sinology
  122. சுரப்பியியல் - Adenology 
  123. சூழ் வளர் பூவியல் - Anthoecology
  124. சூழ்நிலையியல் - Ecology
  125. செதுக்கியல் - Anaglyptics 
  126. செய்கை இயல் - Dactylology
  127. செல்வ வியல் - Aphnology 
  128. செல்வவியல் - Plutology
  129. செவ்வாயியல் - Areology
  130. செவியியல் - Otology
  131. சொல்லியல் - Lexicology
  132. சொல்லியல் - Accidence 
  133. சொற்பொருளியல் - Semasiology
  134. தசையியல் - Myology
  135. தண்டனையியல் - Penology
  136. தமிழியல் - Tamilology
  137. தன்மையியல் - Axiology
  138. தன்னியல் - Autology
  139. தாவர உள்ளியல் - Phytotomy
  140. தாவர நோய் இயல் - Phytopathology
  141. தாவர வரைவியல் - Phytography
  142. தாவரஊட்டவியல் - Agrobiology 
  143. தாவரவியல் - Botany
  144. திணைத் தாவர இயல் - Floristics
  145. திணையியல் - Geomorphology
  146. திமிங்கில இயல் - Cetology
  147. திருமறைக் குறியீட்டியல் - Typology
  148. திருமனையியல் - Naology
  149. திரைப்படவியல் - Cinimatography
  150. தீவினையியல் -Ponerology
  151. துகள் இயற்பியல் - Particle physics
  152. துகளியல் - Koniology
  153. துதிப்பாவியல் - Hymnology 
  154. துயிலியல் - Hypnology
  155. தூய இலக்கியல் - Heirology
  156. தூள்மாழை இயல் - Powder Metallurgy
  157. தேர்தலியல் -Psephology
  158. தேவதை இயல் - Angelology
  159. தேவாலயவியல் - Ecclesiology
  160. தேனீ இயல் - Apiology
  161. தொடர்பிலியியல் - Phenomenology
  162. தொண்டை இயல் - Pharyngology
  163. தொல் அசீரியர் இயல் - Assyriology
  164. தொல் உயிரியல் - Palaeontology
  165. தொல் சூழ்நிலையியல் - Paleo ecology
  166. தொல் பயிரியல் - Paleobotany
  167. தொல் மாந்தவியல் - Paleoethnology 
  168. தொல் மீனியல் - Paleoichthylogy 
  169. தொல் விலங்கியல் - Palaeozoology
  170. தொல்தோற்ற இனவியல் (மாந்த - மாந்தக்குரங்கினவியல்) - Anthropobiology
  171. தொல்லிசையியல் - Ethnomusicology
  172. தொல்லியல் - Archaeology
  173. தொல்லினவியல் - Paleethnology 
  174. தொல்லெச்சவியல் - Archaeozoology
  175. தொழில் நுட்பச் சொல்லியல் - Orismology
  176. தொழில் நுட்பவியல் - Technlogy
  177. தொழிற்சாலை வேதியியல் - industrial chemistry
  178. தொழு நோயியல் - Leprology
  179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் - Pestology 
  180. தொன்மவியல் - Mythology
  181. தோட்டுயிரியியல் - Astacology
  182. தோல்நோயியல் - Dermatology
  183. நச்சியியல் - Virology
  184. நடத்தையியல் - Praxeology
  185. நரம்பியல் - Neurology
  186. நல்லுயிரியல் - Pneumatology
  187. நலிவியல் - Astheniology 
  188. நன்னியல் - Agathology
  189. நாடி இயல் - Arteriology
  190. நாணயவியல் - Numismatology
  191. நாளவியல் - Angiology 
  192. நிகழ்வியல்- Chronology
  193. நிலத்தடி நீரியல் - Hydrogeology
  194. நிலநடுக்கவியல் - Seismology
  195. நிலாவியல் - Selenology
  196. நிலை நீரியல் - Hydrostatics
  197. நீத்தாரியல் - Martyrology
  198. நீர் வளர்ப்பியல் - Hydroponics 
  199. நீர்நிலைகளியல் - Limnology
  200. நீராடல் இயல் - Balneology
  201. நுண் உயிரியல் - Microbiology
  202. நுண் வேதியியல் - Microchemistry
  203. நுண்பொருளியல் - Micrology
  204. நுண்மி இயல் - Bacteriology
  205. நுண்மின் அணுவியல் - Micro-electronics
  206. நூல் வகை இயல் - Bibliology
  207. நெஞ்சக வியல் - Cardiology
  208. நெடுங்கணக்கியல் - Alphabetology
  209. நெறிமுறையியல் - Aretaics 
  210. நொதி இயல் - Enzymology
  211. நொதித் தொழில் நுட்பவியல் - Enzyme tecnology
  212. நோய் இயல் - Pathology
  213. நோய்க்காரணவியல் - Aetiology
  214. நோய்க்குறியியல் - Symptomatology
  215. நோய்த்தடுப்பியல் - Immunology
  216. நோய்த்தீர்வியல் - acology 
  217. நோய்நீக்கியல் - Aceology 
  218. நோய்வகையியல் - Nosology
  219. நோயாய்வியல் - Etiology
  220. நோயியல் - Pathology
  221. படஎழுத்தியல் - Hieroglyphology
  222. படிகவியல் - crystallography
  223. பணிச்சூழ் இயல் - Ergonomics
  224. பத்தியவியல் - Sitology
  225. பயிர் மண்ணியல் - Agrology
  226. பயிரியல்-Phytology
  227. பரியியல் - Hippology
  228. பருப் பொருள் இயக்கவியல் - kinematics
  229. பருவ இயல் - Phenology
  230. பருவப் பெயர்வியல் - Phenology
  231. பல்லியல் - Odontology
  232. பழங்குடி வழக்கியல் - Agriology
  233. பழம்பொருளியல் - Paleology
  234. பற் கட்டுப்பாட்டியல் - Contrology
  235. பறவை நோக்கியல் - Ornithoscopy 
  236. பறவையியல் - Paleornithology
  237. பனிப்பாளவியல் - Glaciology
  238. பாசி இயல் - Phycology
  239. பாப்பிரசு சுவடியியல் - Panyrology
  240. பாம்பியல் - Ophiology
  241. பார்ப்பியல் Neossology
  242. பாலூட்டியல் - Mammalogy
  243. பாறைக் காந்தவியல் - Palaeo Magnetism
  244. பாறையியல் - Lithology
  245. பாறை அமைவியல் - Petrology
  246. பிசாசியல் - Diabology
  247. பிளவையியல் - Oncology
  248. புத்த இயல் - Buddhology
  249. புத்தியற்பியல் - New physics
  250. புதிரியல் - Enigmatology
  251. புதைபடிவ இயல் - Ichnology
  252. புல உளவியல் - Faculty Psychology
  253. புல்லியல் - Agrostology
  254. புவி இயற்பியல் - Geo physics
  255. புவி உயிர்ப் பரவியல் - Biogeography
  256. புவி வடிவ இயல் - Geodesy
  257. புவி வளர் இயல் - Geology
  258. புவி வேதியியல்- Geo-chemistry
  259. புவியியல் - Geography
  260. புவிவெளியியல் - Meteorology
  261. புள்ளியல் - Ornithology
  262. புறமண்டிலவியல் - Exobiology
  263. புற்று நோய் இயல் - Cancerology
  264. பூச்சி பொட்டு இயல் - Acarology
  265. பூச்சியியல் - Entomology
  266. பூச்சியியல் - Entomology
  267. பூச்சியியல் - Insectology 
  268. பெயர்வன இயல் - Acridology
  269. பெரு வாழ்வியல் - macrobiotics
  270. பேயியல் - Demonology
  271. பொதுஅறிவு இயல் - Epistemology
  272. பொருள்சார் வேதியியல் - Physical Chemistry
  273. போட்டியியல் - Agonistics 
  274. போதனையியல் - Patrology
  275. மகளிர் நோய் இயல் - Gynaecology/ Gynecology
  276. மண்டையோட்டியல் - Craniology 
  277. மண்ணியல் - Pedology
  278. மண்புழையியல் - Aerology
  279. மணி இயல் - Campanology
  280. மணிவியல் - Gemology
  281. மதுவியல் - Enology (or Oenology)
  282. மர ஒளி வரைவியல் - Photoxylography
  283. மரபு இயைபியல் - Genecology
  284. மரபு வழியியல் - Geneology
  285. மரவரியியல் - Dendrochronology
  286. மரவியல் - Dendrology
  287. மருத்துவ அளவீட்டியல் - Posology
  288. மருத்துவ நோயியல் - Clinical pathology
  289. மருத்துவ மரபணுவியல் - Clinical genetics
  290. மருந்தாளுமியல் - Pharmacy
  291. மருந்தியல் - Pharmacology
  292. மருந்து வேதியியல் - Medicinal chemistry
  293. மலையியல் - Orology
  294. மழையியல் - Ombrology
  295. மனக்காட்சியியல் - Noology
  296. மனநடையியல் - Nomology
  297. மன்பதை உளவியல் - Social Psychology
  298. மன்பதையியல் - Sociology
  299. மனைவளர்உயிரியல் - Thremmatology
  300. மாந்த இனவியல் - Ethnology
  301. மாவியல் - Morphology
  302. மானிடவியல் - Anthropology
  303. மின் ஒலியியல் - Electro-acoustics 
  304. மின்வேதியியல் - Electrochemistry
  305. மின்னணுவியல் - Electronics
  306. மீனியல் - Ichthyology. 
  307. முகிலியல் - Nephology
  308. முட்டையியல் - Oology
  309. முடியியல் - Trichology
  310. முதற்கோட்பாட்டியல் - Archelogy / Archology 
  311. முதியோர் கல்வியியல் - Andragogy
  312. முதுமையியல் - Gerontology
  313. முரண் உயிரியல் - Teratology
  314. முரணியல் - Heresiology
  315. முறையியல் - Systomatology
  316. முனைப்படு வரைவியல் - Polarography
  317. மூக்கியல் - Rhinology
  318. மூதுரையியல் - Gnomology
  319. மூப்பியல் - Gerontology
  320. மூலக் கூறு உயிரியல் - Molecular biology
  321. மெய் அறிவியல் - Philosophy
  322. மெய்ம்மி நோயியல் - Histopathology
  323. மெய்ம்மியியல் - Histology
  324. மேகநோயியல் - Syphilology
  325. மொழியியல் - Philology
  326. மோப்பவியல் - Olfactology
  327. ரூனிக்கியல் - Runology
  328. வகையியல் - Taxology
  329. வண்ணவியல் - Chromatology
  330. வழக்குப் பேச்சியல் - Dialectology
  331. வழிபாட்டியல் - Liturgiology
  332. வளி நுண்மியல்- Aerobiology
  333. வளிநுகரியியல் - Aerobiology 
  334. வாந்தியியல் - Emetology 
  335. வாய்நோயியல் - Stomatology
  336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
  337. வான இயற்பியல் - Astrophysics
  338. வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) - Aerophilately
  339. வானியல் - Astronomy
  340. வானிலை இயல் - Neteorology/ Astrometeorology
  341. வானோடவியல் - Aerodonetics 
  342. விசை இயக்க இயல் - Kinetics
  343. விண்கற்களியல் – Aerolithology
  344. விண்ணுயிரியியல் - Astrobiology 
  345. விண்பொருளியல் - Astrogeology 
  346. விந்தையியல் - Thaumatology
  347. விலங்கியல் - Zoology
  348. விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) - Agronomics
  349. வெளிற்றியல் - Agnoiology
  350. வேதியியல் - Chemistry
  351. வேதிவகைப்பாட்டியல் - Chemotaxonomy
  352. வேர்ச்சொல்லியல் - Etymology


கலீலியோ கலிலி.

வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும்.
டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்''
- கலீலியோ கலிலி

galileo இந்த ஆண்டை சர்வதேச வானியல் ஆண்டாக (International Year of Astronomy 2009) ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு 1609-இல் கலீலியோ தனது தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்து கூறினார். "சூரியக் குடும்பத்தின் மையப்பகுதி சூரியன். அதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது”. இதனை நம்ப மறுத்த மதவாதிகளுக்காக பொதுமக்களுக்கு முன் செய்முறை விளக்கத்தை அளித்தார். தனது கண்டுபிடிப்பை மக்கள் மத்தியில் தொலைநோக்கி வழியே பார்க்கச் செய்தார். வானை நோக்கி தொலைநோக்கியைத் திருப்பிய அந்த ஆண்டிலிருந்து நவீன அறிவியலின் பெரும் புரட்சி தொடங்கியது.

மக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற விஞ்ஞானி கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும். அந்த உக்கிரமான போராட்டம், "மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது.

ஐரோப்பாக் கண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவுப் புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது. அப்படியொரு காலத்தில்தான் கலீலிலியோ கலிலி இத்தாலியில் பிறந்தார். மருத்துவப் படிப்பை பயின்று வந்தவர் விருப்பமில்லாமல் பாதியிலேயே விட்டுவிட்டு கணிதத்தைப் படித்தார். பேராசிரியராகப் பணியாற்றி பல அறிவியல் கருத்துக்களை எடுத்துரைத்தார். அறிவியல் கருத்துக்கள் தத்துவார்த்தமாக கூறப்பட்டு வந்த காலத்தில், முதன்முதலாக செய்முறையின் மூலம் அறிவியல் கருத்துக்களைச் வெளியிட்ட பெருமை கலீலிலியோவைச் சாரும்.

1609-இல் தாமஸ் ஹரியோட் மற்றும் சிலருடன் சேர்ந்து தொலைநோக்கியை வடிவமைத்தார். இதன் வழியே வான்வெளியை ஆராய்ந்து சூரியன் மையப்பகுதி என்று கூறினார். இங்குதான் அவருக்கு எதிர்ப்பு ஆரம்பமாகியது. பல நூற்றாண்டுகளாக பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்பகுதி என்றும் அதனையே சூரியன் சுற்றிவருகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது. இதற்கு பூமி மையக் கோட்பாடு (Geocentric Theory) என்று பெயர். இதனை தாலமி (கிபி.85-165) கூறினார். இவரது கருத்து கிருத்துவ மதக்கோட்பாட்டின்படி அமைந்திருந்தது. அதனால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதற்குப் பின்னர் நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் (1473-1543) சூரியன் மையக்கோட்பாட்டை (Heliocentric Theory) கூறினார். அதில் "நாம் இருப்பது சூரியக் குடும்பம். அதன் மையப்பகுதியில் சூரியன் உள்ளது. இதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது'' என்றார். அதனை பல நூற்றாண்டுகளாக சமயவாதிகள் மறுத்து வந்தனர். இந்த நிலையில்தான் கலீலியோ “சூரியன்தான் மையப்பகுதி. பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன” என்று புதிய விளக்கமளித்தார். வேண்டுமானால் நீங்களே தொலைநோக்கியில் பாருங்கள் என்று மக்கள் முன்னால் தனது ஆய்வை நிரூபித்தார். ஆனாலும் அவரது கருத்துகளை கிருத்துவ சமயவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிருத்துவ மத குருமார்களால் குற்றம்சாட்டப்பட்டார்.

கலீலியோவின் புதிய அறிவியல் கருத்துக்கள் அபாயகரமானதெனவும் மதத்திற்கெதிரான கொள்கை எனவும் கருதப்பட்டது. ஏனெனில் பைபிள் வாசகங்களில் Pslam 93: 1, Pslam 96: 10, மற்றும் Chronicles 16:30 போன்றவற்றில், "உலகம் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் நகர முடியாது.'' Pslam 104: 5 இல் "கர்த்தர் பூமிக்கான அடித்தளத்தை இட்டார். அதனால் நகர முடியாது'' என்றுள்ளது. இதனை கலீலிலியோ கடுமையாக மறுத்தார். "பைபிள் பாடல்களையும், கவிதைகளையும் கொண்டது. இது வரலாற்று ஆவணமோ தகவல் களஞ்சியமோ இல்லை'' எனக்கூறி அதனை மறுத்தார். அதற்காக தாக்கப்பட்டார். மதத்திற்கு எதிரானவரென பிரச்சாரம் செய்யப்பட்டது.

1621- இல் கலீலியோ தனது முதல் நூல் "த அஸயேர்' (The Assayer) எழுதினார். ஆனால் வெளியிட அனுமதி கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டார். பின்னர் 1623-இல் வெளியிட அனுமதி கிடைத்தது. 1630-இல் Dialogue concerning the Two Chief World System வெளியிட அனுமதி கோரினார். அதனையும் 1632-ல் தான் வெளியிட அனுமதி கிடைத்தது. வரலாற்றில் உண்மையான கருத்துக்கள் கொண்ட நூல்கள் வெளியிட அவ்வப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி அந்த நூல்கள் வெளியில் வந்து தனது உண்மைகளைக் கூறி அறிவார்ந்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். கலீலியோ த அஸயேர் (The Assayer) அறிவியலை எதார்த்தத்துடன் போதித்தது. அந்நூல் ‘அறிவியல் அறிக்கை' (Scientific Manifesto) என்று அழைக்கப்படுகிறது. பல தடைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது தனது அறிவியல் கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டார்.

அவரது கண்டுபிடிப்புகளில் புவியின் மையக் கோட்பாட்டிலிருந்து சூரிய மையக் கோட்பாடு பற்றிய அறிவியல் கருத்தை வெளியிட்டார். வியாழன் கோளை ஆராய்ந்து அதற்கான நான்கு துணைக்கோள்களை கண்டறிந்தார். இவை கலீலியோ நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. தொடர்ந்து வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தார். முதன்முதல் சூரியனில் புள்ளிகளைக் (Sun Spots) கண்டறிந்து கூறினார். வெள்ளி, சனிக் கோள்களை ஆய்வு செய்தார். பூமியின் துணைக்கோளான நிலாவினை தொலைநோக்கி வழியே ஆய்வு செய்து அங்குள்ள மலைகளையும் பள்ளங்களையும் கண்டறிந்தார். அதனைக் கொண்டு நிலவினை வரைபடமாக்கி அளித்தார். இதுவே நிலா ஆராய்ச்சியில் மாபெரும் மைல்கல் ஆகும். இத்துடன் நெபுலா, பால் வீதி மண்டலம், நெப்டியூன் கோள் போன்றவற்றை ஆராய்ந்து கூறினார். அது மட்டுமல்லாது தொழில்நுட்பத்திலும் பல சாதனைகளை புரிந்தார். குறிப்பாக ஜியாமின்டிரி கருவி, தெர்மோமீட்டர், டெலஸ்கோப் போன்றவற்றை வடிவமைத்தார்.

இயற்பியலில் எந்திரவியல் மற்றும் பொருட்களின் பொருண்மை (Mass) பற்றிய அறிவியல் கருத்துக்களை உருவாக்கித் தந்தார். இவையே பின்னர் சர் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் ஆய்வு மூலமாக இருந்தன. அதனாலேயே கலீலியோ ‘நவீன இயற்பியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார். கலீலியோ இயற்பியல், கணிதவியல், வானவியல், தத்துவ அறிஞர். அறிவியல் புரட்சியில் முக்கியமான பங்காற்றியவர். பல அறிவியல் கருத்துக்களை சமயவாதிகளுக்குப் பயப்படாமல் வெளியிட்டார். தனது கருத்துகளை உண்மையானவை என்று விளக்க கடுமையாக வாதாடினார். தமது வாழ்நாள் முழுவதும் சமயவாதிகளுக்கு எதிராக போராடினார்.

ஆனாலும் போப் ஆண்டவரால் கலீலியோவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். உலகில் முதன்முதலாக நவீன தொலைநோக்கியின் மூலம் வானத்தைப் பார்த்த அவரது அந்தக் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் பல காலம் வாழ்ந்தார். அப்போதும் தனது அறிவியல் கருத்துக்களை விடாப்படியாக பரப்பிவந்தார். இந்த அறிவியல் புரட்சியாளர் நோயின் கொடுமை தாங்காமல் இறந்து போனார். அவரது இறந்த உடலைக்கூட அவமரியாதை செய்ய மதப்பழமைவாதிகள் காத்திருந்தனர். அவரது நண்பர்களால் இரகசியமாக உடல் அடக்கம் செய்யப்பட்டது. தனது உண்மையான அறிவியல் கருத்துக்களுக்காக எப்போதுமே சமரசம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் போராடி வந்தவர் கலீலியோ. சர்வதேச வானியல் ஆண்டில் நமது மனித அறிவியலின் ஆகச்சிறந்த போராளியான கலீலியோவை நினைவுக் கூர்ந்து அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாக இதனை அனுசரிக்க வேண்டிய கடமை நமக்குரியது.

தத்துவ ஞானி சாக்ரடீஸ்.

கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது. சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.

பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.

இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை. சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர். நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும். நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)

நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும் குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின! தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!!!...

தாமஸ் ஆல்வா எடிசன்.

மந்த புத்தியோடு, செவிடான சிறுவன் தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.


1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளக் [Fort Gratiot Military Post] கார்பென்ட்டராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார்.

இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! 'எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ' என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஏழு வயதில் திடாரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய 'இயற்கைச் சோதனை வேதம் ' [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.


தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி 1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .


எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் அகிலப் பதிப்பி ' [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.


முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி ' [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!


எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.


மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல் ' [Sun 's Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி 'நுண்ணுனர் மானி ' [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.

எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.


இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!


1881 ஜனவரியில் முதல் 'விளக்கொளி மின்சார அமைப்பு ' [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார ஏற்பாடு ' [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.


விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் 'எதிர்த்துகள் ' [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எதிர்த்துகள் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு ' [Electronics Industry] அடிகோலியது.


மூவிக் காமிராக் [Movie Camera] கண்டுபிடிப்பு போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் 'பேசும் படம் ' [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ' இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.


1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.


'ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ', என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். 'கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ' என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: 'கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ' 'ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ' என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?


அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்கு களை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு 'விடுதலை விக்கிரகத்தின் ' [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!...

அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு.

ஒரு நாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார் அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொதுவான குளியலறைதான் இருந்தது. அப்பகுதிக்கு முல்லாவும் குளிப்பதற்காக வந்து சேர்ந்தார். அழுக்கான ஆடையை அணிந்திருந்த முல்லாவை அங்கு நின்ற யாரும் சரியாகக் கவனிக்கவில்லை அங்கிருந்த வேலைக்காரர்கள் கூட முல்லாவை அலட்சியமாக நடத்தினர்.

சீக்கிரம் குளித்துவிட்டு போகும்படி அவசரப்படுத்தினர். ஒருவாறாக குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். முல்லாவின் இந்நடத்தையினை சற்றும் எதிர்பார்க்காத அவ்வேலைக்காரர்கள் "இவர் பெரிய செல்வந்தர்
என்பதை மன்னமே தெரியாமல் இருந்து விட்டோமே முதலே தெரிந்திருந்தால் அவருக்குச் சில பணிவிடைகள் செய்துவிட்டு இன்னும் அதிகமான பொற்காசுகளை வாங்கியிருக்கலாமே..." என்று நினைத்தனர். இரண்டு நாட்கள் கழிந்தது.

மீண்டும் ஒருதடவை முல்லா அவ்விடத்திற்கு குளிப்பதற்காக வந்து சேர்ந்தார். இப்போது முல்லாவுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. முல்லாவிற்கு பணிவிடை செய்வதற்கு வேலைக்காரர்கள் முந்தியடித்தனர். ஒருவரை ஒருவர் போட்டியிட்டு முல்லாவுக்குப் பணிவிடை செய்தனர். அன்றைய தினம் முல்லா தங்களுக்கு ஆளுக்கு பத்து பொற்காசுகளாவது தருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் நினைத்தற்கு மாறாக முல்லா ஆளுக்கு ஒரு செப்புக்காசுகளை மாத்திரமே தந்தார்.

முல்லாவின் இச்செயற்பாட்டால் விரக்தி அடைந்த அவர்கள் முல்லாவிடமே கேட்டுவிட்டனர். "இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபச்சாரம் செய்தற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு...?" என்று கேட்டனர். இதற்கு முல்லா " நீங்கள் அன்று செய்த அலட்சியத்துக்கான பரிசுதான் இது இன்று செய்த உபச்சாரத்திற்கான பரிசுதான் நான் அன்றே உங்களுக்குத் தந்துவிட்டேன்" என்று கூறிவாறு நடையைக் கட்டினார். வேலைக்காரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அசடுவளிய நின்றனர்.

Friday, September 23, 2011

காதல் போதை


காதல்போதை
மிகவும் ஆபத்தானது
காதலில் விழுந்தவன்
மீள்வதும்மில்லை
மீள நினைப்பதும்மில்லை


சுமாரான பிகர்க் கூட
சூப்பர் பிகரா தெரியும்
அடுத்தவனுடன் வருகையில்

( எல்லாம் ஒரு வைத்தெரிச்சல்தான்)

படித்ததில் பிடித்தது…………….

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

*********************************************

எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

*********************************************

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

*********************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

*********************************************

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…

*********************************************

நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..

*********************************************

நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….

*********************************************

அழவைப்பேன்
உன்னை
அன்பே
என்னை கிள்ளி…

*********************************************

நமக்கு பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஓடி கொண்டிருக்கிறது
கடைசி பேருந்ததையும்
விட்டு விட்டு
கேட்டு கொண்டிருக்கிறது
காதல்…

*********************************************

என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

*********************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க…

*********************************************

எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….

*********************************************

வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

*********************************************

மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….

*********************************************

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……